மன்னை முத்துக்குமார்
அண்ணல் அம்பேத்கருக்கு (14-04-2010) 120 வது பிறந்த நாள் :

ஆமாம் அப்படி என்ன விசேசம் எலோருக்கும் தான் பிறந்த நாள் வருகிறது எனலாம், உண்மைதான் பலருக்கு இறந்த பின் ஒரு சில ஆண்டுகள் நினைவில் கொள்வார்கள் , ஆனால் அம்பேத்தர் போன்ற ஒரு சிலருக்கு மட்டும் இறப்பு என்பதே இல்லை என்பதாகவே தோன்றும் ..காரணம் அவர் தனக்காக என்று வாழாமல் தன் சமூகத்துக்கு வாழந்தவர் , சமூக முன்னேறத்துக்கு என்றே தன் வாழ்நாளை செலவிட்டவர் --


’நீங்கள் என்னுடைய வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ள ஒன்று இருக்கிறது என்றால் அது நான் என் சமூகத்தை ஒரு போதும் கைவிட்டது இல்லை , என்னுடைய வாழ்நாள் முழுவதும் அவர்களுடைய மகிழ்விலும், துயரத்திலும் பங்கேற்பதில் நான் பெருமை கொள்கிறேன்.''


என்று சொல்லும் அவர் அப்படியே வாழ்ந்து இன்றும் பலக்கோடி மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இன்று பலர் அப்படிப் பட்ட உன்னத தலைவனுக்கு அவர் இட்டுச் சென்ற பணியை தொடர்ந்து அவருக்கு நன்றி செலுத்துவதை விட்டு அவரை ஒரு வியாபார சின்னமாக மட்டும் பயன் படுத்தும் அவலமும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.. சமூக விடுதலைக்கு என்ன செய்ய வேண்டும் என்று மிக தெளிவாகவே அவர் வழிமுறைகளை சொல்லி சென்று இருக்கிறார், அவர் பவுத்தத்துக்கு சென்றார் என்றால் அது அவருடைய பரிசோதனை முயற்சி அதை அப்படியே நாமும் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை , அவரது பல செயல்கள் ஒரு பரிசோதனை முயற்சியகாவே இருந்து இருக்கிறது..நாம் தான் காலத்துக்கு ஏற்றது எது என்பதை அடையாளம் காண வேண்டும்.

இன்று நாட்டின் ஒவ்வொறு கிராமத்திலும், நகரத்திலும் மாநகரங்களிலும் அண்ணலின் சிலையை காண முடியும் , உலகில் அதிக சிலை உள்ள ஒரு புரட்சியாளர் இருக்கிறார் என்றால் அது டாக்டர் அம்பேத்கர் மட்டுமே..இந்த இடத்தில் நாம் சிந்திக்க வேண்டிய விசயம் என்னவெனில் சிலை வைத்து கொண்டாடப்பட வேண்டியவர் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது , ஆனால் அதை அண்ணலே உயிரோடு இருந்தால் விரும்ப தகாத செயல் என்று தான் சொல்லுவார்..சமூக மாற்றத்துக்கு செய்ய வேண்டியதை செய், அது போதும் என்பார் . சிலைகள் மாற்றத்தை உண்டு பண்ணூமா? என்றால் குறைந்த பட்சம் வாய்ப்பு கூட இல்லை என்றே பதில் வரும்.. அவர் மீது கொண்டுள்ள அன்பை நாம் நம் சமூக மக்களுக்கு தொண்டு செய்து காண்பித்தால் போதும்..ஒவ்வொறு தாழ்த்தப்பட்ட சகோதரனும் இட ஒதுக்கீடில் பயன் பெற்று அரசு வேலை வாய்ப்பில் தன்னுடைய நிலையை உயர்த்தி கொண்ட பிறகு எனது சந்ததியினருக்கு இனி இட ஒதுக்கீடு வேண்டாம் என் சமூகத்துக்கு கொடுங்க கஷ்டப்படும் ஒரு ஒடுக்கப்பட்ட என் சகோதரன் மேலே வரட்டும் என்பதில் அவருக்கு நன்றி காட்டலாம் இன்னும் ஒருபடி மேலே போய் ஒரு கிராமத்தில் மிகவும் கஷ்டப்படும் ஒரு தன் சமூக இளைஞனை தத்து எடுத்து படிக்க வைப்பதில் அண்ணலுக்கு நன்றியை செலுத்தலாம் இன்னும் பல வழிமுறைகளில் அதை செய்யலாம்