மன்னை முத்துக்குமார்
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி பல அடிப்படை தேவைகளை பெற்றுத் தந்த இம்மானுவேல் இன்பசேகரனின் குருபூஜைக்கு ஜான்பாண்டியன் அஞ்சலி தெலுத்த வந்த போது அவரை தடை செய்தது ஜெ. அரசு காவல்துறை. அவரை கைது செய்ததை கண்டித்து 500 தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர், அவர்களை கலைந்து போக செய்ய எண்ணறற வழிமுறைகள் இருக்கையில் துப்பாக்கியை புரயோகிக்க வேண்டிய அவசியம் என்ன? இந்த உத்தரவை யார் கொடுத்திருப்பார்கள்? காவல்துறையினர் தன் உயிருக்கு ஊறு நேரும் தருணம் தான் ஏதோ தவிர்க்க முடியாத சமயங்களில் பயன்படுத்தலாம் என்கிறது சட்டம். அப்படி இருக்கையில் ஆறு தலித்துக்கள் எத்தனை காவலர்களை தாக்க்கி இருக்கிறார்கள்? இது திட்டமிட்ட செயல் என்றே தலித்துக்கள் கருதுகிறாகள். இது யாரை சந்தோசப்படுத்த நடத்தப்பட்ட அரச கொலை மிரட்டல்? ஆதிக்க சாதியினருக்கு இருக்கும் வாழ்வுரிமை தலித்துக்களுக்கு ஏன் மறுக்கபடுகிறது?

பரமக்குடி அரச பயங்கவாதத்தை கண்டிது தமிழ்தேசியம் பேசுவோரில் இதுவரை யாருமே ஒரு வார்த்தையளவு கண்டனமும் தெரிவிக்கவிலை , அப்ப்டின்னா தமிழ் தேசியத்தில் தலித்துக்கள் இருப்பார்களா? இருக்க மாட்டார்களா? தமிழ்தேசியம் அமைக்கும் முன்பே ஒடுக்கப்பட்ட மக்களின் மீது இவ்வளவு அக்கரைக் கொண்டுள்ள இந்த தமிழ் தேசியம் தலித்துகளுக்கு தேவை தானா? ஆதிக்க சாதியினரின் பகைமையை பெற்றுவிடக்கூடாது என்பதில் தான் தமிழ்தேசியவாதிகளுக்கு எத்தனை அக்கரை? ம்ம்ம்...பேசுங்க இன்னும் எத்தனை நூற்றாண்டுகளாலும் உங்களால் தமிழ் த்தேசியம் அமைக்க முடியாது என்பதை சவாலாகவே நான் முன்வைக்கிறேன்.

நாம் தமிழரில் (சீமான்) கூட தலித்துக்கள் இல்லாமல் போய் விட்டார்களே! அப்ப தலித்துக்கள் தமிழர் கூட இல்லையா? என்ன கொடுமை?

இந்த அரச பயங்கரவாத துப்பாக்கி சூடு தலித்துக்களுக்கு தாங்கள எந்த அளவில் இந்த (சுதந்திர?) இந்தியாவில் வாழ்கிறோம் என்று உணர்த்தி விட்டது..இனி தலித்துக்களின் உண்மையான விடுதலைய அடைய பல வகை போராட்டஙள் உருவெடுக்கும் என்பது மட்டும் உறுதி...