மன்னை முத்துக்குமார்

பற்ற வைக்கப்பட்ட வெடிபொருள்
பாய்வது பயந்து அல்ல,

நீ காட்டிய உக்கிரத்தை
என்னாலும் காட்ட முடியும் என்று
வெடித்துக் காட்ட தான்.

அடிபட்டவனின் அழுகுரல் அடங்காது
அடித்தவனை அச்சமூட்டிக்கொண்டே தான் இருக்கும்.

அடித்தவனே அடங்கு
அடித்ததற்காக வருந்து.

பசுவும் ஒரு நாள் திரும்பும்
பாய்ந்தவன் மனமும் ஒடுங்கும்.

-மன்னை முத்துக்குமார்.