மன்னை முத்துக்குமார்

ஒரு நாள் அறிஞர் பிளாட்டோவிடம் செல்வந்தர் ஒருவர் வந்தார்.

என் மகனுக்கு நீங்கள் கல்வி கற்றுத் தரவேண்டும்.
அதற்கு எவ்வளவு பணம் கேட்கிறீர்கள்?
என்று கேட்டார்.

“ஐநூறு பவுண்டுகள்“ என்றார் பிளாட்டோ.
ஐநூறு பவுண்டுகளா?? இந்தப் பணத்தில் ஒரு அடிமையையே விலைக்கு வாங்கிவிடலாமே!! என்றார்.

அதற்கு பிளாட்டோ..

நீங்கள் சொல்வதும் சரிதான்.. இந்தத் தொகைக்கு ஒரு அடிமையையே வாங்கிக்கொள்ளுங்கள். உங்கள் மகனோடு சேர்த்து  இரண்டு அடிமைகள் உங்கள் வீட்டில் இருப்பார்கள் என்றார்.