மன்னை முத்துக்குமார்
கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்

பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்

நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்

இனிய என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்.
-
--புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.